செவ்வாய், 6 ஏப்ரல், 2010

காய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா?

நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது. இந்த இருதய அடைப்பு மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும்.

இயற்கை வழியில் செல்லும் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து தப்பித்துவிடலாம்.
காரட்:தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

முட்டைக்கோசு: மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பினைக் குறைக்கிறது.
பீட்ரூட்:ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து பீட்ரூட்டில் உள்ளதால் தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகை நோய் வருவதில்லை. இரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.


இஞ்சி: கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப் போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது.


வெங்காயம்:வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இரத்தத்தின் உறை தன்மையும், ஒட்டும் தன்மையும் குறைவதால் மாரடைப்பு நோய் வரவே வராது.
மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.
இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தவர்களும் கூட தினமும் 100 கிராம் வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


ஆப்பிள்:இதில் உள்ள `பெக்டின்' என்ற நார்ச்சத்து இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு 10லிருந்து 15 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது. ஆப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.


அன்னாசி:இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் அன்னாசி சிறந்து விளங்குகிறது. மேலும், அன்னாசிப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் உறையும் தன்மை குறைவதோடு, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளும் நீங்கும்.


எலுமிச்சம்பழம்:உடம்பிலுள்ள சிறிய இரத்தக் குழாய்களின் சுவர்களை எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் உறுதிப்படுத்துவதோடு சிறுநீரகங்களில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. எலுமிச்சையில் `பெக்டின்' சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.


பூண்டு: இதில் `சாலிசிலிக்' என்ற இரசாயனப் பொருள் உள்ளது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் இரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பை உண்டாக்கும் போது பூண்டிலுள்ள `சாலிசிலிக்' என்ற சத்து அந்த அடைப்பை உடைத்துவிடுகிறது.
தாமரைப்பூவிலும் இச்சத்து உண்டு.


சுரைக்காய்: இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்பை நீக்குவதில் சுரைக்காய் பலே கில்லாடி! சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 200 மிலி மூலம் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் தவிடு பொடியாகிவிடும்.

வெள்ளரிக்காய்: இயற்கை அன்னை நமக்கு நல்கிய அற்புதமான காய். இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட்டைக் கணிசமாக குறைத்து, இதயத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக இயக்க வல்லது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் இதற்கும் பங்கு உண்டு.

தர்ப்பூசணி: இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கி இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது.

முள்ளங்கி, வெண்டைக்காய்: இந்தக் காய்களைத் தினசரி காலையில் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் மூன்றே மாதங்களில் 80 சதவிகிதம் ஒழிக்கப்பட்டுவிடும். ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.

எனவே, காய்களையும் பழங்களையும் நிறையச் சாப்பிட்டு இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகளைப் போக்கி மாரடைப்பு நம்மைத் தாக்காத வண்ணம் இன்புற்று வாழலாம்.


மெயிலில் வந்தது


முட்டை இட்லி




தேவையான பொருட்கள் :

இட்லி -3
முட்டை -1
வெங்காயம் -1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
பச்சைமிளகாய் -1
கறிவேப்பிலை -தேவையான அளவு
கரம் மசாலா -1 /4 ஸ்பூன்
நல்லமிளகுப்பொடி -1 /2 ஸ்பூன்
இட்லி பொடி - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி -1 /4 ஸ்பூன்
மிளகாய் பொடி (தேவையென்றால் போடலாம் )
நெய் -2 ஸ்பூன்


செய்முறை :

இட்லியை பொடியாக உதிர்திக் கொள்ளவும் .

நான்ஸ்டிக் பான் இல் நெய் விட்டு அதில் கறிவேப்பிலை , வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி கொள்ளவும் .

சிறிது வதங்கியதும் பொடிவகைகளைபோட்டு ஒரு நிமிடம் கிளறி , முட்டையையும் போட்டு கிளறவும் அதனுடன் இட்லியையும் போட்டு நன்கு கிளறவும் ,(கொத்துபரோட்டாவிற்க்கு செய்வது போல் நன்கு பொடி பொடியாக வர வேண்டும் ).5 நிமிடம் களித்து இறக்கி சூடாக பரிமாறவும் .தேவையானால் மல்லி இலை கூட தூவிக் கொள்ளலாம் ..
,

சனி, 3 ஏப்ரல், 2010

கிளே ரோஜாப்பூக்கள்



தேவையானவை :
கலர் கிளேக்கள்

அலுமினியக்கம்பி

கிரீன் டேப்


செய்முறை:

1 ) படத்தில் காட்டியப்படி கிளேயை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும் .(படம்:1 )

2 ) பின்னர் பெருவிரல் கொண்டு கிளேயை தட்டையாக பரத்திக் கொள்ளவும் .(படம்:2 )

3) பரத்திய கிளேயை பெருவிரலாலேயே சுருட்ட ( லேசாக உருட்ட )ஆரம்பிக்கவும் (படம்:3 )

4 ) படத்தில் காட்டியபடி உருட்டிக் கொள்ளவும் (படம் 4 )

5 ) இலைக்கும் இதே போல குட்டி உருண்டையாக கிளேயை எடுத்து பரத்தி படத்தில் காட்டிய படி இலை வடிவத்தில் செய்து வைத்துக் கொள்ளவும் .(படம் 5 )


6 ) படத்தில் காட்டிய படி உருட்டிய இதழ்களை கம்பியில் ஒவொன்றாக ஒட்டிக் கொள்ளவும் (படம் 6 )

7 )இப்படி 5 அல்லது 6 இதழ்கள் ஒட்டிக் கொண்டு இலையையும் ஒட்டி விடுங்கள் பின்னர் கம்பி இல் கிரீன் டேப் சுற்றி விடுங்கள் .

இப்போது ரோஜா பூக்கள் ரெடி .



இதே போல தான் வேறு பூக்கள் நீங்கள் விரும்பிய டிசைன் இல் செய்து கிளாஸ்களிலும் ஒட்டிக் கொள்ளலாம் .பார்க்க நல்ல இருக்கும் .

செவ்வாய், 30 மார்ச், 2010

ஜெனீவா



ரூபாய் நோட்டுகளில், அதிகமாக கையாள்பவர்களுக்கு அவற்றில் உள்ள
கிருமிகள் மூலம் தொற்று காய்ச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என ஆய்வில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் ஏவ்ஸ் தாமஸ். ஜெனீவா பல்கலைகழக மருத்துவமனையில்
உள்ள தொற்று காய்ச்சல் ஆராய்ச்சி மைய தலைவராக உள்ளார். இவர், ரூபாய்
நோட்டுகளில், அதிகமாக புழக்கம் வைத்திருப்போருக்கு ஏற்படும் பாதிப்புகள்
பற்றி ஆய்வு மேற்கொண்டார்.

இதில், ஆச்சர்யம் அளிக்கும் விவரங்கள் தெரியவந்தன. இதுபற்றி தாமஸ்
கூறியதாவது:ரூபாய் நோட்டுகளில் தொற்று காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய கிருமிகள்
உள்ளன. ஏற்கனவே, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து காற்று மூலமாக இந்த
கிருமிகள் ரூபாய் நோட்டுகளில் பரவுகின்றன. இத்தகைய கிருமிகள் 24 மணி நேரத்தில்
இருந்து 17 மணி நேரம் வரை வீரியத்துடன் இருக்கும்.


கிருமிகள் உள்ள ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி விட்டு, பின்னர் கைகளை
மூக்கிலோ, அல்லது வாயிலோ வைத்தால் நமக்கும் அந்த பாதிப்பு ஏற்பட்டு விடும்.
ரூபாய் நோட்டுகளில், அதிகமாக புழங்கும் வங்கி ஊழியர்கள் போன்றவர்களுக்கு
மட்டுமே இதுபோன்ற பாதிப்பு ஏற்படும். மற்றவர்களுக்கு, இதற்கான வாய்ப்பு
மிகவும் குறைவு.


கையுறைகள், முகமூடிகள் அணிந்து கொள்வதன் மூலம் இதுபோன்ற பாதிப்பை தவிர்க்க
முடியும். இந்த கிருமிகளில், பல்வேறு வகைகள் உள்ளன. சிலவகை கிருமிகள் இரண்டு
வாரங்கள் வரை வீரியம் இருக்கும். இன்னும் சில வகை கிருமிகள் சில மணி நேரங்கள்
வரை மட்டுமே வீரியத்துடன் இருக்கும்.இவ்வாறு தாமஸ் கூறினார்.


நீங்கள் ரூபாய் நோட்டுக்களை உபயோகப் படுத்தியப் பின் கைகளை கழுவுவது நல்லது.

மெயிலில் வந்தது

ஞாயிறு, 28 மார்ச், 2010

ப்ரூட் கஸ்ட்டட்

தேவையான பொருட்கள் :



கஸ்ட்டட் - 3 ஸ்பூன்
பால் - 2 கப்
தண்ணீர் -1 /2 கப்
சீனி - இனிப்பிற்கு தகுத்த அளவு
வெனிலா எஸசன்ஸ் - 1 ஸ்பூன்
ப்ரூட்ஸ் - உங்களுக்கு விருப்பமான ப்ரூட்ஸ்
டேட்ஸ்
டிரை நட்ஸ் .



செய்முறை:



1)
ப்ரூட்சை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள் .


2)
கஸ்ட்டட் பவுடர் ஐ சிறிது தண்ணீர் அல்லது சிறிது பால் விட்டு கரைத்து கொள்ளவும் .


3) பாலை தண்ணீர் + சீனி சேர்த்து காய்ச்சவும் .


4)
பால் பொங்கும் போது கலக்கிய கஸ்ட்டட் ஐ விட்டு இரண்டு நிமிடங்கள் காய்ச்சவும் .


5)
பிறகு வெனிலா எஸசன்ஸ் சேர்த்து இறக்கி , ஆற வைக்கவும் .


6)
பரிமாறும் போது நறுக்கிய ப்ரூட்ஸ் ,நட்ஸ்,டேட்ஸ் சேர்த்து பரிமாறவும்.



இதில் ஐஸ்கிரீம், ஜெல்லி ,கேக்,டுட்டி பிருட்டி இவை எல்லாம் சேர்த்துக் கொள்ளலாம் .பெரிய கண்ணாடி கப்பில் ஒவ்வொன்றாக அடுக்கி வைத்து மேலே செர்ரி பழம் வைத்தால் பார்க்கவும் நன்றாக இருக்கும் ,சாப்பிடவும் நன்றாக இருக்கும் .

புதன், 24 மார்ச், 2010

பாகற்காய் புளிக்கூட்டு

தேவையான பொருட்கள் :


பாகற்காய்--- 2

சின்ன வெங்காயம்- ஒரு கைப்பிடி அளவு

தக்காளி -1

பச்சை மிளகாய் -2 ( நீளவாக்கில் வெட்டியது)

பூண்டு - 2 பல்

மல்லி தழை - சிறிதளவு

சீனி - சிறிது

புளி கரைசல் -தேவையான அளவு

பொடி வகைகள்:

மஞ்சள் பொடி-1 /2 ஸ்பூன்

மிளகாய் பொடி -1 ஸ்பூன்

ஜீரகம் பொடி - 1 ஸ்பூன்

காயப்பொடி - 1 ஸ்பூன்

தாளிக்க :

கடுகு

கறிவேப்பிலை

வெந்தயம்

முழு ஜீரகம்

இஞ்சி பூண்டு விழுது

செய்முறை:

1 ) பாவக்காய், சின்ன வெங்காயம் ,தக்காளி,பூண்டு இவற்றை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2 ) கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளித்து, பின்னர் சின்ன வெங்காயம் தக்காளி,ப.மிளகாய் இவற்றை போட்டு நன்கு வதக்கவும் .

3 )பின்னர் வெட்டி வைத்த பாவக்காயை போட்டு உப்பும் சேர்த்து நன்கு வேக விடவும் .வெந்ததும் பொடி வகைகளைப் போட்டு ,சிறிதளவு புளி கரைசல் விடவும் .

4 )மசாலா வாசம் போனதும் சிறிது சீனி ,மல்லி தழை தூவவும் .நன்கு நீர் வற்றியதும் இறக்கவும் .


இதை அடுத்தநாள் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இற்கும்.கசப்பும் குறையும் .

பாவக்காய் உடலுக்கு மிகவும் நல்லது

அடிக்கடி உணவில் பாவக்காயை சேர்த்துக் கொள்ளுவதால் சர்க்கரை இன் அளவு கட்டுப்படும் .

பித்தத்தை தணிக்கும்.

தயிரில் உப்பு கலந்து அதில் பாவக்காயை வட்டம் வட்டமாக வெட்டி போட்டு வெயிலில் காயவைத்து, காய்ந்தும் பொறித்து தயிர் சாதம் போன்ற சாதங்களுடன் சாப்பிடலாம் .